ரயில்களில் யாசகம் கேட்க இன்றுமுதல் தடை!!

528

ரயில்களில் யாசகம் கேட்போரை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர் முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.