நடுவீதியில் யானைகள் செய்த அட்டகாசம் : 31 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

512

இரத்தினபுரி கஹவத்தை நகரத்தில் நேற்று இரவு நடந்த பெரஹரவில் யானைகள் குழப்பம் அடைந்தமையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 31 பேர் காயமடைந்துள்ளனர்.

பெரஹரவில் பயணித்த ஒரு யானை முதலாவதாக குழம்பிய நிலையில் ஏனைய யானைகள் பின்னர் குழம்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பெரஹர பார்க்க வந்த மக்கள் பதற்றமடைந்த நிலையில், நிலைமை மேலும் மோசமடைந்தள்ளது. இதன்போது காயமடைந்த மக்கள் இரத்தினபுரி மற்றும் கஹவத்தை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குள் 19 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. பெரஹர கடமைகளில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.