றெஜினாவுக்கு நீதி கோரி நாளை முற்றாக முடங்கும் மன்னார்!!

585

சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த மாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்தும், நாடு முழுதும் இடம்பெறும் பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை எதிர்த்தும் அமைதிப் பேரணி ஒன்று இடம் இடம்பெறவுள்ளது.

குறித்த பேரணி நாளை காலை 9 மணிக்கு முருங்கன் பேருந்து தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த அமைதி பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்ட ரீதியில் நாளை முழு கடையடைப்பை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.