இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை சம்பவத்தில் தோண்ட தோண்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதில் ஒன்று அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்களை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அந்த குழாய்களில் எதுவும் தண்ணீர் செல்லும்படி இணைக்கப்படவில்லை. புராரி குடும்பம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதிய டைரி குறிப்புகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 11 குழாய்களின் மர்மம் குறித்து விசாரணை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
தலைநகர் டெல்லியை உலுக்கிய இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் 77 வயது நாராயன் தேவி என்பவர் மட்டுமே கழுத்து நெரிபட்டு இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.
எஞ்சிய 10 பேரும் கழுத்தில் கயிறு கட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட 57 வயது பிரதிபாவின் மகள் 33 வயதான பிரியங்காவுக்கு கடந்த மாதந்தான் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
விசாரணை அதிகாரிகளால் கைப்பற்ற டைரி குறிப்புகள் மற்றும் கடிதங்களில், அவர்கள் திட்டமிட்டு நாள் குறித்து தற்கொலை செய்து கொண்டது நிரூபணமாகியுள்ளது. ஆனால் மர்மமான அந்த குழாய்கள் தொடர்பில் விசாரணை அதிகாரிகள் குழம்பிப்போயுள்ளனர்.
11 குழாய்களில் 4 நேராகவும், நான்கு வளைவாகவும், ஒரு குழாய் தனியாகவும் பொருத்தப்பட்டுள்ளது.
இது அவர்களின் ஆவி வெளியே செல்ல அமைக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த கூட்டு தற்கொலை சம்பவத்தில் சிக்காத நாராயண் தேவியின் இன்னொரு மகனும் மகளும் குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியில் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.