தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் 2 வயது பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தின் கள்ளக்குறிச்சி அருகே 60 அடி ஆழமுள்ள தரை கிணறு உள்ளது, இங்கே நேற்று முன்தினம் 2 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று சடலமாக மிதந்துள்ளது.
இதை பார்த்த ஊர்மக்கள் உடனடியாக கீழ்குப்பம் பொலிசுக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணை நடத்தியதில் அருள்மணி- அஞ்சலை தம்பதியின் குழந்தை என தெரியவந்தது.
அவர்களது வீட்டுக்கு சென்ற போது வீடு பூட்டியிருந்ததுடன், அருள்மணி காட்டுப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பொலிசுக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கும் அஞ்சலைக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது, 2 வயதில் அனுசியா என்ற குழந்தையும் உண்டு.
ஆனால் என் மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது.
எனவே கடந்த 3 நாட்களுக்கு முன் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தையுடன் அவளது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அங்கே சென்று சண்டையிட்டேன், குழந்தையை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பிறந்ததாக இருக்காது என ஆத்திரம் வந்தது. இதனால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டேன் என தெரிவித்துள்ளார்