11 பேர் மர்ம மரணம் : கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறேன் என்று வாக்களித்த சாமியார் எங்கே?

474

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் சாமியார் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது, அந்த வீட்டில் பொலிஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில் எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும், எந்த நேரத்தில் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. அத்துடன் அவர்களது குடியிருப்பில் இருந்து வெளியே துருத்தியபடி 11 குழாய்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் துணி துவைக்கும் இடத்தில் செல்போன் ஒன்று சைலண்ட் மோடில் இருந்துள்ளது, அதை சுவற்றுடன் டேப் போட்டு ஒட்டி வைத்துள்ளனர்.

அதாவது, முக்தி அடையும் சடங்கிற்கு செல்போன் ஆகாது, அதை பக்கத்தில் வைத்துக்கொள்ளக்கூடாது என சாமியார் ஒருவர் சொல்லி இருக்கிறார்.

மேலும் டைரி குறிப்பிலும், நல்ல பூஜை செய்து கடவுளுடன் ஐக்கியம் ஆனவர்கள், உங்களுக்கு தூக்கு மூலம் மரணம் வராது, அப்படி சடங்கும் செய்யும் பட்சத்தில் தவறாக ஏதும் நடந்தால் கடைசி நேரத்தில் சாமியார் வந்து காப்பாற்றுவார் என குறித்த சாமியார் கூறியதாகவும் எழுதப்பட்டுள்ளது.

எனவே சாமியாருடனான செல்போன் உரையாடல் தொடர்பான ரெக்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன, அவரை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.