இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

515

சென்னையில் சாலையில் நடந்து சென்ற போது மாடியிலிருந்து இளைஞர் விழுந்ததில் படுகாயமடைந்த தன்யஸ்ரீ தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், இவரது மகள் தன்யஸ்ரீ(வயது 4). தனது தாத்தாவுடன் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சாலையில் சென்ற போதே இத்துயர சம்பவம் நடந்தது.

ஸ்ரீராமுலு என்ற தெருவில் நான்காவது மாடியிலிருந்து சிவா என்ற இளைஞர் சிறுமி மீது விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தன்யஸ்ரீ, உயிருக்கு போராடினார்.

உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பலரது பிரார்த்தனையினாலும், தீவிர சிகிச்சையாலும் உடல்நலம் தேறி வந்த தன்யஸ்ரீ தற்போது ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீதரின் நிலையை அறிந்த தமிழக அரசு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் தன்யஸ்ரீவின் மருத்துவ செலவுகளை ஏற்றமை குறிப்பிடத்தக்கது