ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் : டெல்லியை உலுக்கிய 11 பேர் மரணத்தில் அவிழாத முடிச்சு!!

390

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய 11 பேர் தற்கொலை வழக்கில் ஆலமரத்தின் விழுதுகள் போன்று தொங்க வேண்டும் என்று டைரியில் எழுதி வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் புராரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களுள் ஒருவர் மட்டும் கழுத்து நெரிக்கப்பட்டு தரையில் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

11 பேரின் சடலங்களை கைப்பற்றிய டெல்லி பொலிசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே அந்த வீட்டின் பூஜை அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரி ஒன்றில், எந்த நாளில் தற்கொலை செய்து கொள்வது எப்படி தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட குறிப்புகள் எழுதியிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கண்களையும், வாயையும் கட்டிக் கொண்டால் தூக்கிலிட்டுக் கொள்ளும் போது வலி தெரியாது என்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

மட்டுமின்றி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அனைவரும் பாத பூஜை செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது.

அதாவது ஆலமர விழுதுகள் போல் தொங்க வேண்டும் என்பதுதான் அந்த பூஜையின் விதி என கூறப்படுகிறது.

இந்த அமானுஷ்ய கடிதம் சிக்கியதால் விசாரணை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.

இதை மாந்த்ரீகர்கள் யாரேனும் சொல்லி இவர்கள் செய்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கையில் 11 பேரும் எந்தவித போராட்டமுமின்றி உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

மேலும் அந்த டைரியில் இறைவனை பார்க்க போவதற்கு முன்பு யாரும் செல்போன்களை பயன்படுத்தக் கூடாது என்று எழுதியிருந்ததால் 6 செல்போன்கள் சைலன்ட் மோடில் வைத்து ஒரு கவரில் சுற்றப்பட்டு அலமாரியில் இருந்தன.

சிசிடிவி கமெரா காட்சிகளை ஆராய்ந்தபோது குடும்பத்தினர் அனைவரும் 10.40 மணிக்கு உணவருந்தியுள்ளதும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.