வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் விபத்தில் படுகாயம்!!

587

வவுனியாவிலிருந்து யாழ் நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் பரந்தன் பகுதியில் கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று காலை 7மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியான குடும்பஸ்தர் நித்திரை மயக்கத்தின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

விபத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆசீர்வாதம்(கிச்சா) என்பவரே கழுத்தில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் எதுவிதமான காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்