மாடுகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை!!

398

திருகோணமலை சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளை திருடிய இருவருக்கு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று உத்தரவிட்டார்.

ஈச்சிலம்பற்று, கருக்காமுனை பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 42 வயதுடைய இருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் சேருவில பிரதேசத்தில் இரண்டு பசு மாடுகளைத் திருடி விற்பனை செய்த வழக்கு மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையிலே இருவரையும் குற்றவாளிகளாக இணங்கண்டு மூன்று மாதம் கட்டாய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.