வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம், நெடுங்கேணி பிரதேச செயலகத்தற்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ, அங்கவீனமான 04 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஆடுவளர்ப்பிற்காக ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
வடமாகாண சபை உறுப்பினரின் வேண்டுகோளிற்கமைவாக கனடா மாதகல் நலன்புரி ஒன்றியத்தின் நிதியுதவியில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
செட்டிகுளம் பிரதேசத்தில் 02 குடும்பங்களிற்கும், நெடுங்கேணியில் 02 குடும்பங்களுக்குமாக நான்கு குடும்பங்களுக்கான உதவிகள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் சார்பில் அவரது இணைப்பாளர் பா.சிந்துஜனால் நேற்று (05.07.2018) பயனாளிகளிடம் கையளிக்கபபட்டன.