மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் (04.07.2018) கரடியின் தாக்குதலுக்குள்ளாகி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இரணை இலுப்பைக்குளம் காட்டுப் பகுதியில் கடந்த 04.07.2018 அன்று மதியம் 3 மணியளவில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு இருவர் சென்றுள்ளனர்.
இதன் போது மாலை 6 மணியளவில் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி 40, 46 வயதுடைய இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.