கதிர்காமத்திற்கு பாதயாத்திரை சென்ற யாத்திரிகர் ஒருவர் குமுக்கனில் நேற்று திடீரென மரணமடைந்துள்ளார்.
இவர் காரைதீவைச் சேர்ந்த சின்னவன் மேசிலார் என அழைக்கப்படும், 70 வயதுடைய எஸ்.விஜயசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காட்டுப்பாதை திறந்த முதல் நாள் தனது மகளுடன் கதிர்காமத்திற்கு பயணித்துள்ளார். அன்றிரவு வாகூரவட்டையில் தங்கிய அவர்கள் மறுநாள் குமுக்கனைச் சென்றடைந்த போது இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
இவருடைய சடலம் பாணமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் பிரேதபரிசோதனை மற்றும் விசாரணைக்காக பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், பிரேதபரிசோதனை மற்றும் மரணவிசாரணை இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு காரைதீவு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.