இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய வித்தியாசமான திருமணம்!!

476

இலங்கையில் நடந்த திருமணம் வைபவம் ஒன்று நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக உலகமெங்கும் உலகக் கிண்ண காற்பந்தாட்ட காய்ச்சல் ரசிகர்களை தொற்றியுள்ளது.

இலங்கையில் உள்ளவர்களும் காற்பந்து போட்டிகளுக்கு தீவிர ரசிகர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் காற்பந்து மீதான தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜோடி ஒன்று தமது திருமணத்தை செய்துள்ளது.

கலாச்சார ஆடைகளை அணியாது, காற்பந்து போட்டியாளர்களாக மைதானம் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

எனினும் திருமணம் செய்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில் அவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.