வீட்டுத் தோட்டத்தில் அதிசயமான தென்னை மரம்!!

652

சாலியவெவ யாய ஹதே பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் தென்னை மரம் ஒன்று மூன்று கிளைகளுடன் வளர்ந்துள்ளது.

மூன்று கிளைகளிலும் காய்கள் காய்பதாக அதன் உரிமையாளரான ஈ.எஸ். சோமாவதி தெரிவித்துள்ளார்.

20 வயதான இந்த தென்னை மரம் தனி மரமாக வளர்ந்துள்ளதுடன், பல வருடங்களுக்கு முன்னர் அதில் கிளைகள் முளைத்துள்ளதாகவும் அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிளைகள் மூலம் சிறந்த தேங்காய் அறுவடை கிடைப்பதாகவும், தற்போது, மரத்தின் கிளை ஒன்றிலும் கிளை வளர்ந்து வருவதாகவும் ஈ.எஸ். சோமாவதி கூறியுள்ளார்.