வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் கிராமத்தில் உள்ள ஆறுமுகநாவலர் சிலை உடைப்பு!!

614

வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை காடையர்கள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.07.2018) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றினைந்து மது வருந்துவதாகவும், அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி வாழ் மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.