கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா கொழும்பில் சுட்டுப் படுகொலை!!

579

நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

செட்டியார் தெருவில் உள்ள அவரது காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

1 979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி பிறந்த இவர் தனது 39ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருடைய சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.