இலங்கையின் வாகன சாரதிகளுக்கு முக்கிய தகவல்!!

754

இலங்கையில் வாகன போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளிடம் அறவிடப்படும் அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கான அபராத தொகையே அதிகரிக்கப்படவுள்ளன.

மேலும், அபராத தொகையானது 30 – 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.