வவுனியாவில் பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

541

 

வவுனியா கண்டி வீதியில் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதால் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முச்சக்கரவண்டியின் சாரதியும் அவரின் மனைவி மற்றும் ஒரு வயதுடைய மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.