வவுனியாவில் மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் கம்பனிகள்!!

515

வவுனியாவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்கள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்றைய தினம் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

சிறுவர்களை இலக்கு வைக்கும் மது, சிகரட் கம்பனிகளின் தந்திரோபாயங்களும், மாணவர்கள் மத்தியில் சிகரட் பாவனை என்பது முட்டாள் தனத்தின் அடையாளம் என்ற விடயமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் வளவாளராக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் அருளானந் இணைந்திருந்ததோடு சிகரட் பாவனையால் உதடு கறுத்தல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், பாலியல் பலவீனமடைதல், அசிங்கமான முகத்தோற்றம் ஏற்படல் போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.