தங்கையின் கையை பிடித்த இளைஞன் : கோபத்தில் சகோதரன் செய்த செயல்!!

419

திருகோணமலை பகுதியில் தனது தங்கையின் கையை பிடித்த நபரை அடித்து காயப்படுத்திய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருக்கடலூர், திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் பதினைந்து வயதுடைய தங்கை தனியார் வகுப்புக்குச் சென்று வரும் போது இளைஞர் ஒருவர் கையை பிடித்ததாக சிறுமி வீட்டுக்குச் சென்று தனது சகோதரன் மற்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கையைப்பிடித்த இளைஞரை சிறுமியின் சகோதரன் தாக்கி காயப்படுத்தி உள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் சிறுமியின் சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.