கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில், இரு விமானிகள் நேருக்குநேர் மோதவிருந்த விபத்து 200அடி இடைவெளியில் தவிர்க்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10-ம் தேதியன்று கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு 162 பயணிகளுடன் இண்டிகோ விமானமும், பெங்களூரில் இருந்து கொச்சிக்கு 166 பயணிகளுடன் புறப்பட்ட விமானமும் பெங்களூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேருக்கு நேர் மோதவிருந்துள்ளது.
இதற்கிடையில் 200 அடி இடைவெளியின் போது விமான மோதல் தடுப்பு சிஸ்டம் அலாரம் (TCAS) ஒலிக்க துவங்கியுள்ளது.
இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட விமான ஓட்டிகள் உடனடியாக மோதலை தவிர்ப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு, பெரும் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் செயல்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது விமான விபத்து புலனாய்வு வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.