வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

798

 இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு  13.07.2018 வெள்ளிகிழமை நண்பகல் பன்னிரண்டு மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ .சதா சங்கரதாஸ் சிவாசாரியார் தலைமையில் கொடிஏற்றதுடன்  ஆரம்பமாகியது .

மேற்படி மகோற்சவத்தில்
13.07.2018 வெள்ளிகிழமை  நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றமும்
25.07.2018 புதன்கிழமை  சப்பர திருவிழாவும்
26.07.2018 வியாழக்கிழமை  காலை இரதோற்சவமும்
27.07.2018 வெள்ளிகிழமையன்று தீர்த்தோற்சவமும் இடம்பெற உள்ளது .