வவுனியா நகரில் கடந்த 2 வருடங்களில் 37 சட்டவிரோத கட்டடங்கள்!!

545

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு வருடங்களில் 37 சட்டவிரோத கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பாக நகரசபையினருக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கோரப்பட்ட தகவல்களுக்கு நகரபையினர் இவ்வாறு கடந்த இரண்டு வருடங்களில் நகரப்பகுதிகளில் 37 சட்டவிரோத கட்டடிங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத கட்டிடங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நகரசபையில், கடந்த 24.05.2018 அன்று நடைபெற்ற சபைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அனுமதியற்ற கட்டிட உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்பு அவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதற்குப்பின்பும் கட்டிட அனுமதியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சபையில் தீர்மானிக்க்பபட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு 12 சட்டவிரோதக்கட்டிடங்களும் 2018ஆம் ஆண்டு தற்போது வரையில் 25 சட்டவிரோத கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களில் இவ்வருடமே மிகவும் அதிகரிக்கப்பட்ட 25 சட்டவிரோத கட்டிடங்கள் நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.