வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் பேருந்து தரிப்பிட நிழற்குடை திறந்துவைப்பு!!

492

வவுனியா நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் மொபிடெல் நிறுவனம் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் இணைந்து வவுனியா நகர்ப்பகுதியில் பேருந்து தரிப்பிட நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் இரண்டாம் கட்டம் நேற்று இரு பகுதிகளில் இடம்பெற்றது.

வவுனியா நகரை அழகுபடுத்தும் முதல் திட்டம் கடந்த மாதம் ஈரப்பெரியகுளம், கார்கில் பூட்சிட்டிக்கு முன்பாக என இரண்டு பகுதிகளில் பயணிகளின் நன்மை கருதி பேருந்து தரிப்பிட நிழற்குடை அமைக்கப்பட்டு வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டம் நேற்று காலை வேப்பங்குளம், புதிய பேருந்து நிலையம் ஆகிய இரு பகுதிகளில் பேருந்து தரிப்பிட நிழற்கூடை வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த வில்லுவராச்சி, நெளுக்குளம், ஓமந்தை, மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வவுனியா நகரசபைத்தவிசாளர், உப தவிசாளர், வர்த்தகர் சங்கத்தலைவர், செயலாளர், வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளால் பேருந்து தரிப்பிட நிழற்கூடை பகுதியில் மரம்நாட்டி வைக்கப்பட்டது. பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.