வவுனியாவில் பொலிசாரால் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைப்பு!!

471

வன்னி பிராந்திய பொலிஸ் அலுவலகத்தின் ஏற்பட்டில் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனால் A9 வீதியில் நேற்று (13.07) மக்கள் பாவனைக்காக பேரூந்து தரிப்பிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள புதிய பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து தரிப்பிடத்திற்கு அதிதிகள் மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதனை தொடர்ந்து பொலிஸ் கீதம் தமிழில் இசைக்கப்பட்டு வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் பேரூந்து தரிப்பிடம் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவில் பொலிஸ் அலுவலகத்தின் அனுசரணையுடன் நான்கு பேரூந்து தரிப்பிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன், உப தவிசாளர் எஸ்.குமாரசாமி, நகரசபை உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.