இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வங்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறக்குமதியாளர்களின் டொலர் தேவை அதிகரித்த காரணமாக இலங்கை ரூபாயின் பெறுமதி பலவீனமடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் 159 ரூபாய் 55 – 70 சதமாக பதிவாகியுள்ளது.
இந்த வருடத்தில் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இதுவொரு தனித்துவமான நிகழ்வு அல்ல என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.