இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்!!

976

இலங்கையில் நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனைக்கான அலுகோசு பதவியை ஏற்பதற்கு தயாராக இருப்பதாக பெண்ணொருவர் அறிவித்துள்ளார்.

சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 71 வயதான எல்.பீ.கருணாவத்தி என்பவரே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகர்களுக்காக மரண தண்டனை நிறைவேற்றுவது என்றால் சம்பளம் இல்லாமல் இந்த பதவியை ஏற்பதற்கு தான் தயார் என தெரிவித்துள்ளார்.

கோடி கணக்கான பெறுமதி கொண்ட போதை பொருட்கள் மற்றும் வேறு போதை மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து எதிர்கால சந்ததியை வீணடிக்கும் இவ்வாறான வர்த்தகர்களை தராதரம் பாராமல் அழித்து விட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தர்ம தீவாக இருந்த இந்த நாட்டை மரண தீவாக மாற்ற ஒரு போதும் இடமளிக்க கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பலரும் அச்சம் காரணமாக இந்தப் பதவிக்காக வர தயங்கும் போது. 70 வயதான கருணாவத்தியின் அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.