சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் : இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

291

அதிக விலைக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை ஈடுபட்டுள்ளது.

12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக 5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயுவின் விலை 55 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படுவதுடன் குற்றமிழைத்தவர் என காணப்பட்டால் 5,000 – 10,000 வரையில் தண்டப்பணம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறைத்தண்டனை அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகிறதாக கூறப்படுகிறது.

ஏதாவது ஒரு நிறுவனம் தவறிழைக்குமாயின் பத்தாயிரம் ரூபாவிற்கும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் இடையில் தண்டப் பணம் விதிக்கப்படுவதுடன் 2 வருடகால சிறைத்தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் விதிக்கப்படும்.

இதேவேளை கூடுதலான விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பிலான தகவல்களை 1977, 0117 75 51 81 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.