வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பயணித்த மாவட்ட செயலக வாகனம் நேற்று இரவு அனுராதபுரம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து கலந்துரையாடல் ஒன்றினை முடித்துக்கொண்டு வவுனியாவிற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அனுராதபுரம் பகுதியில் நேற்று இரவு மாவட்ட செயலகத்தின் வாகனம் வீதியிலிருந்த மாட்டுன் மோதி விபத்துக்குள்ளாகியதில் வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது
எனினும் வவுனியா மாவட்ட அரசங்க அதிபருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. அவர் பாதுகாப்பாக வேறு ஒரு வாகனத்தில் வவுனியாவை வந்தடைந்துள்ளதாகவும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.