எனக்கு தாயாக மாறிய என் மகன் : பிரபல நடிகையின் உருக்கமான பதிவு!!

658

நடிகை சோனாலி பிந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்

காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம், பம்பாய் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சோனாலி பிந்த்ரே.

சோனாலி இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மகனிடம் தனக்கு புற்றுநோய் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.