முன்னாள் போராளி வீட்டிலிருந்து பசு மாட்டினை திருடிச் சென்ற நபர்கள் செய்த மோசமான காரியம்!!

258

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை, அடையாளம் தெரியாத நபர்கள் இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ளனர்.

ஜெயந்திநகரில் அமைந்துள்ள வீட்டு வளவில் கட்டப்பட்டிருந்த பசுவினை நேற்று முன்தினம் இரவு திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

முன்னாள் போராளியும், இரண்டு பிள்ளைகளின் தாயுமான குறித்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவே களவெடுத்துச் செல்லப்பட்டுள்ளது.