பிரபல திரைப்பட நடிகையான விஜிசந்திரசேகர் சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையான விஜி சந்திரசேகர் பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவரிடம் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து கேட்ட போது, இவர்களுக்கு எல்லாம் மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
சமீத்தில் அயனாவரத்தில் சிறுமி ஒருவர் 11 பேரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். இதை எல்லாம் பார்க்கும் போது அவ்வளவு கோபம் வருகிறது.
2 வயது குழந்தையையும் இப்படி செய்கிறார்கள், இவர்களுக்கு எல்லாம் மரணதண்டனை தான் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு கடுமையான தண்டனை இருந்தால் மட்டுமே இந்த குற்றங்களை தடுக்க முடியும் எனவும், இந்த தண்டனை மட்டும் கொடுத்து பாருங்கள், அவர்கள் திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்.
இது போன்ற சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, கொடூர கொலை போன்றது தான், இவர்கள் இந்த தவறுக்கு காரணம் என்று தெரிந்துவிட்டால், அது உறுதியாகிவிட்டால் உடனடியாக தண்டனை கொடுத்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.






