அடுத்த கிழமை முதல் முற்றாக முடங்கப் போகும் ரயில்வே சேவைகள்!!

356

எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழில்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க அதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர் மற்றும் ரயில் சாரதிகளின் தொழிற் சங்கங்களின் செயலாளர் இந்திக்க தொடங்கொட இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்கு தாமதமாகும் காரணமாக இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பிரச்சினைகள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் தீர்வு கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.