கம்பளையில் டயர் வெடித்ததில் நபர் ஒருவர் 30 அடி தூரம் வீசப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். பல்விலதென்ன பிரதேசத்தில் வாகனம் பழுது பார்க்குமிடத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
பாரிய ட்ரக் வண்டி ஒன்றின் டயரின் மீது ஏறி காற்றடித்து கொண்டிருந்த நபர் 30 அடி தூரம் உள்ள தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நிலந்த வீரரத்ன என்ற 46 வயதான 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவரது மகன் மற்றும் மனைவி வெளிநாட்டில் தொழிலுக்காக சென்றுள்ள நிலையில் கடைசி மகனுடன் இந்த நபர் வாழ்ந்து வருகின்றார்.
நிரந்தர தொழில் இல்லாமையினால், அவர் பழுது பார்க்குமிடத்தில் சிறிய சிறிய வேலைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காற்றடிப்பதற்காக டயர் மீது ஏறியுள்ளார்.
எனினும் திடீரென டயர் வெடித்தமையினால் அவர் 30 அடி உயரத்திற்கு தூக்கி எறியப்பட்டு விழுந்துள்ளார். விழுந்தவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.





