திறமையான மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : பெரும் சோகத்தில் குடும்பம்!!

950

அம்பலாந்தோட்டையில் கல்வியில் திறமையான மாணவி ஒருவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டமையினால் முழு குடும்பமும் துன்பத்தில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியம்பலா கஸ்சிவ வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் சசிந்தா பிரபோதி என்ற மாணவியே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் 6ஆம் வகுப்பில் ஆங்கில பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

4 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான சசிந்தாவுக்கு இந்த நோய் இருப்பது 2008ஆம் மே மாதம் தெரியவந்துள்ளது. பின்னர் அவருக்கு மஹரகம வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு பல்வேறு நோய் தாங்கள் ஏற்பட ஆரம்பித்ததாக சசிந்தாவின் தாயார் ஷரானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

“காய்ச்சல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மகளுக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்வதற்காக மஹரகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மகளுக்கு பலவிதமான நோய்கள் ஏற்பட ஆரம்பித்தது. தற்போதும் நாம் தொடர்ந்தும் மஹரகம வைத்தியசாலைக்கு செல்ல நேரிட்டுள்ளது. இந்த நிலையில் மகளுக்கு கல்லீரலில் புற்நோய் அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தினர். எங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கை மேற்கொள்ள மாத்திரமில்ல, தற்போது சாப்பிடுவதற்கேனும் வசதியின்றி வாழ்கின்றோம். அயலவர்களே எங்களுக்கு உணவு வழங்குகின்றார்கள். அந்த அளவிற்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நாங்கள் வாழ்வதற்கும், எங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்கு யாராவது உதவினால் புண்ணியம் கிடைக்கும். எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாத நிலையில் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். முடியும் என்றால் யாராவது உதவுங்கள் என கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகளின் தந்தைக்கு நிரந்தர தொழில் இல்லாத நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றார்கள்.” என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

திறமையான மகள் கற்பதற்கும், அவரது நோயை குணப்படுத்துவதற்கும், தேவையான உதவிகளை வழங்க விரும்பினால் 0714878164 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு அவரது தந்தை பிரசத் குமார தெரிவித்துள்ளார்.