கண்டி – தலாதுஓயா, ஹாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர். பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் ஊகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த மேலும் 15 பேர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.