அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற சிங்கள, தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 3ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணை செப்டம்பர் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 20ம் திகதியுடன் நிறைவடைவதாகவும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





