அரையிறுதியில் தென் ஆப்ரிக் அணி..

617

south africa

மேற்கிந்திய தீவு , தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது . நேற்று நடைபெற்ற இப்போட்டி, கனமழை காரணமாக தாமதமாகத் தொடங்கியது. தலா 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர். நாணய சுழற்சியில் வென்றமேற்கிந்திய தீவு அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது .

தென் ஆப்ரிக்க அணி 31 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ஓட்டங்களை எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி 26.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் டக்ளஸ் லூயிஸ் முறைப்படி ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே B குழுவிலிருந்து இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



~கேசா~