யாழில் மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தந்தை விபத்தில் பரிதாபமாக பலி!!

582

யாழ்ப்பாணம் – கோப்பாய் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் தண்ணீர் பவுசர் ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

கோப்பாயிலிருந்து கைதடி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது பின்னால் வந்த தண்ணீர் பவுசர் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதன்போது, 45 வயதுடைய ரஞ்சன் எனப்படும் நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் 18 வயதுடைய அவரது மகளும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.