இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் அதிரடியாக கைது!!

521

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள் இருவரும் உள்ளடங்குவதாக கடற்படை பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பில் இருந்து சுமார் 117 கடல் மைல்களுக்கு அப்பால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு டோரா படகுகளில் குறித்த நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் யார்? எந்த நாட்டுக்கு செல்ல முற்பட்டனர் என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.