இடைவேளையில் உணவருந்த சென்ற மாணவி புகையிரதத்தில் மோதி பலி!!

664

அம்பலாங்கொடை பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை நகரில் உள்ள தனியார் வகுப்பொன்றில் இருந்து இடைவேளை வழங்கப்பட்ட போது உணவருந்துவதற்காக புகையிரத பாதை ஊடாக நடந்து சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கமையில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் புகையிரதத்திலேயே குறித்த மாணவி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மாணவியை பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.