கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பரபரப்பு!!

540

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் பயணிகளின் எதிர்ப்பு காரணமாக பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் ரயில் சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் வேலைநிறுத்ததை ஆரம்பித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பயணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத புகையிரத ஊழியர்கள் மற்றும் பயணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.