அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறுவோம்- குமார் சங்கக்கார..

426

Kumar Sangakkara

சம்பியன்ஸ் A குழுவில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்று இலங்கை அணியின் அனுபவ வீரர் குமார் சங்கக்கார கூறியுள்ளார்.நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது .

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கக்கார கூறியதாவது: நான் விளையாடிய மிகச் சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று. இந்த சதம் அணியின் வெற்றிக்கும், அரை இறுதி வாய்ப்பை தக்கவைக்கவும் உதவியதில் கூடுதல் மகிழ்ச்சி. ஜெயவர்தன சிறப்பாக ஒத்துழைத்தார். கடைசி கட்டத்தில் குலசேகர அதிரடியாக விளையாடி எனக்கு நெருக்கடி இல்லாமல் பார்த்துக் கொண்டார். ஸ்வான்,ப்ரோட் ஓவர்களில் அடித்து ஆடியது ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக்கியது.

அடுத்து நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் கவனம் செலுத்துவோம். அந்த போட்டியில் வென்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என நம்புகிறேன். இவ்வாறு சங்கக்கரா கூறியுள்ளார்.

எதிர்வரும் 17ம் திகதி இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இறுதி லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெறும்.

~கேசா~