உயிரிழந்த அரசியல்வாதி பிரதேச சபை கூட்டத்திற்கு வந்த அதிசயம்!!

723

உயிரிந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மாதாந்த கூட்டத்திற்கு வந்து கையொப்பமிட்டதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அனுராதபுரம் பிரதேச சபையின் தாமரை மொட்டு கட்சி உறுப்பினர் பிரதீப் நிலவிர கடந்த 5ஆம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்தார்.

அவர் உயிரிழந்த பின்னர் கடந்த 9ஆம் திகதி பிரதேச சபையில் மாதாந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த கூட்டத்தின் முடிவில் உயிரிழந்த உறுப்பினர் கலந்து கொண்டதற்கான ஆவணங்கள் மற்றும் அவர் கையொப்பமிட்ட கடிதமும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த உறுப்பினரின் கையொப்பத்தை இவ்வாறு பயன்படுத்தி பிரதேச சபையில் மோதலை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த போலி ஆவணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.