வெள்ளவத்தையில் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தையில் வசித்து வரும் 46 வயதுடைய பிரியதர்சினி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





