இளம் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன் : தடுக்க முயன்ற தாயின் பரிதாப நிலை!!

512

மினுவாங்கொட பிரதேசத்தில் தனது தாயின் தலையில் கொடூரமாக தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட, ஜாபாலவத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் வீட்டிற்கு வந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதன்போது சண்டையை தடுக்க தாய் முன்வந்த போது அவரது தலையில் பாரிய காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த தாயார் மினுவாங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேக நபர் 18 வயதான கணவன், இதற்கு முன்னரும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.