வன்முறையாக மாறிய பெண்களின் சண்டை : பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!!

582

பதுளையில் இரு பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைத்துள்ளது.

கத்திக் குத்தில் படுகாயமடைந்த பெண் ஆபத்தான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கன்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீகஹகிவுல, அத்துருஎல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான திருமணமான பெண் ஒருவரே சம்பவத்தில் படுகாயமடைந்த ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பணப் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட கத்திக் குத்தில் அவரது உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.