கோட்டபாய ராஜபக்ஷ்வை கொல்ல முயன்ற 6 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

501

குண்டொன்றை வெடிக்க வைத்து பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ்வை கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 6 பேரையும் கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்ணிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் உரிய பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சந்தேகநபர்களை நீதவான் ஜூன் 21 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.