மத்திய அமைச்சர் நாராயணசாமி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது..
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பதை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இதனால் இலங்கை தமிழர்களுக்கு எவ்வித நலனும் கிடைப்பது இல்லை.
மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் தான் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை செய்து தரமுடியும். மத்திய அரசு செய்யக் கூடிய உதவிகள் தமிழர்களுக்கு கிடைக்கும்.
ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது. அரசியல் ஆதாயத்துக்காக தமிழக அரசியல் கட்சிகள் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுகின்றன என்று அவர் கூறினார்.